3 மாதங்களுக்குள் அண்ணா பல்கலை.யுடன் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்திலுள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் இன்னும் 3 மாதங்களுக்குள் அண்ணாபல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு விடும் என்று அந்தப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கலாநிதிகூறினார்.

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரிகளை இணைப்பது குறித்து கலந்தாய்வுக்கூட்டம் இன்று (திங்கள்கிழமை) நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழகத்திலுள்ள 185 பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட கலாநிதி கூறியதாவது:

தமிழகத்திலுள்ள 220 பொறியியல் கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பது பற்றி முன்னரேமுடிவு செய்தது தான்.

ஆனால் இந்த பொறியியற் கல்லூரிகள் இணைந்தவுடன் செயல்படும் முறைகளைப் பற்றி ஆய்வு செய்யவே இந்தகலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இன்னும் 3 மாதங்களுக்குள் தமிழக பொறியியற் கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்துடன்இணைந்துவிடும்.

அனைத்துப் பொறியியற் கல்லூரிகளுக்கும் ஒரே பாடத்திட்டம் இனி அமலுக்கு வரும்.

மாணவர்கள் இணையத்தளம் மூலம் தங்கள் கல்விதிறத்தை சுய மதிப்பீடு செய்யும் வகையில் இணையத்தளவசதியை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அதிக கட்டணம் வசூலிக்கும் பொறியியற் கல்லூரிகளைப் பற்றி மாணவர்கள் இ.மெயிலில் தொடர்பு கொண்டுதெரிவித்தால் அவர்கள் மேல் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலாநிதி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+