மழையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.25,000 நிதியுதவி
சென்னை:
தமிழகத்தில் மழையால் இறந்த 12 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 நிதியுதவி அளிக்கப்படும் என்றுமுதல்வர் பன்னீர்செல்வம் இன்று (திங்கள்கிழமை) கூறினார்.
கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் பெய்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை மழை காரணமாக 12 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைந்த பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கி விட்டன.
இந்நிலையில் பன்னீர்செல்வம் இன்று நிருபர்களிடம் கூறுகையில், மழையினால் இறந்த 12 பேரின்குடும்பத்தினருக்கும் தலா ரூ.25,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.6,000 வழங்கப்படும் என்றும் பன்னீர்செல்வம் கூறினார்.
முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும்.
மேலும் பயிர்களையும் வீடுகளையும் கால்நடைகளையும் இழந்த மக்களுக்குத் தகுந்த உதவிகளை அளிப்பதற்கானநடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு பன்னீர்செல்வம்உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, கனத்த மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவராணத்தை தமிழக அரசு வழங்கவேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று திருச்சியில் கேட்டுக் கொண்டார்.
அதே போல் திருவாரூர் விவசாயிகள் சங்கமும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைஉடனடியாக வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.












Click it and Unblock the Notifications