தென் தமிழகத்தில் கன மழை: நீரில் மூழ்கிய பயிர்கள்
சென்னை:
குமரிமுனைக்கும், மாலத்தீவுக்கும் இடையிலான கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த மண்டலம் நிலைகொண்டிருப்பதால் தென் தமிழ்நாட்டில் இன்னும் 2 நாட்களுக்கு கன மழையும், பலத்த காற்றும் வீசும் என்றுவானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் தென் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், நாகப்பட்டனம் ஆகியமாவட்டங்கள்தான் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்தப் பயிர்கள் அனைத்தும்தற்போது பாழாகி விட்டது. மொத்தம் 50,000 ஏக்கர் அளவுக்கு தாளடி பயிரும், லட்சக்கணக்கான ஏக்கர் அளவுக்குசம்பா பயிரும் போடப்பட்டிருந்தது.
அதேசமயம், இந்த கன மழை கன்னியாகுமரி, நெல்லை மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் சந்தோஷத்தைக்கொடுத்துள்ளது. அங்கு இப்போது பயிர்களுக்குத் தண்ணீர் தேவை உள்ள நேரம். எனவே இந்த கன மழையால்பயிர்களுக்குப் போதுமான தண்ணீர் கிடைத்துள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
ஆனால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளர்கள், சிவகாசியில் தீப்பெட்டி தயாரிப்பாளர்கள், செங்கல் சூளைஉரிமையாளர்கள் இந்த கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மூன்று உற்பத்திகளுமே கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலியில் சாலைகள் அனைத்தும் மழையில் அரிக்கப்பட்டு விட்டன. சாலைகளில் நடமாடுவதற்கே சிரமம்என்ற நிலையில் அனைத்து சாலைகளும் உள்ளன.
குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளமாக கொட்டுகிறது. அபாய அளவைத் தாண்டிதண்ணீர் கொட்டுவதால் அருவிகளில் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்த மாவட்டங்கள் தவிர மதுரை, திருச்சி, ராமேஸ்வரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துவருகிறது. குறிப்பாக திருச்சியில் தொடர்ந்து 3 நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. காவிரி ஆற்றில்வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இதற்கிடையே, குமரிமுனைக்கும், மாலத்தீவுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த மண்டலம் நிலைகொண்டிருப்பதால் தென் தமிழ்நாடு மற்றும் தென் கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கன மழை அல்லதுமிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications