For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சரவணா ஸ்டோர்ஸ் பத்திரிகை அலுவலகம் மீது பயங்கர தாக்குதல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பத்திரிக்கை அலுவலகத்தின் மீது இன்றுபயங்கரத் தாக்குதல் நடந்தது.

பயங்கர ஆயுதங்களுடன் அங்கு நுழைந்த ஒரு கும்பல் அலுவலகத்தை சூறையாடியது. ஊழியர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடந்தது. இதில் பல ஊழியர்களுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.

"சரவணா ஸ்டோர்ஸ் - வீக்லி" என்ற பெயரில் வந்து கொண்டிருக்கும் இந்தப் பத்திரிக்கையின் அலுவலகத்தில்இன்று காலை புகுந்த கும்பல், அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருள்களை அடித்து நொறுக்கியது.

பட்டப் பகலில் இந்தச் சம்பவம் நடந்தது. சமீப காலமாக தனக்கும் தன்னுடைய நிறுவனங்களுக்கும் தொடர்ந்துமிரட்டல்கள் வந்து கொண்டிருப்பதாக இப்பத்திரிக்கையின் அதிபரான "சரவணா ஸ்டோர்ஸ்" செல்வரத்தினம்சமீபத்தில் தான் ஒரு வார இதழுக்குப் பேட்டியளித்திருந்தார்.

மேலும் இவருடைய பத்திரிக்கையில் சமீபத்தில் வெளியான ஒரு கட்டுரை தொடர்பாக பாமகவினர் மத்தியில்எதிர்ப்புக் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று இந்தப் பத்திரிக்கை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

போலீசார் வழக்குப் பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X