கன மழையால் நாகை அருகே மூழ்கிய கப்பல்
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்:
பாண்டிச்சேரி அருகே தரை தட்டிய கப்பலை மீட்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் நாகப்பட்டினம்அருகே மேலும் ஒரு கப்பல் தரை தட்டியுள்ளது.
சில நாட்களாக பெய்து வரும் கன மழை காரணமாக தென் தமிழ்நாட்டில் இயல்பு நிலை பாதித்துள்ளது.அதேபோல, பாண்டிச்சேரியிலும் அடை மழை பெய்து வருகிறது.
பாண்டிச்சேரி துறைமுகத்திற்கு ரசாயானப் பொருட்களை ஏற்றி வந்த சிறு கப்பல், துறைமுகம் அருகே தரை தட்டிநின்று விட்டது. மூழ்கும் நிலையில் உள்ள அந்தக் கப்பலை மீட்கும் முயற்சி நடந்து வருகிறது.
இந்நிலையில், நாகப்பட்டினம் கடலில் நாகூர் அருகே காவிரிப்படுகை எண்ணை சுத்திகரிப்பு ஆலை நிறுவனத்தினர்மிதவை துறைமுகம் அமைத்து வருகின்றனர்.
இந்தப் பணியில் தனியாருக்குச் சொந்தமான கப்பல் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
கன மழை மற்றும் சூறாவளி காரணமாக இந்தக் கப்பல் கடலில் மூழ்கி விட்டது.












Click it and Unblock the Notifications