கொடியேற்றும் போது இறந்த அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு ஜெ. ரூ.50,000 உதவி
சென்னை:
கொடியேற்ற முயற்சிக்கும்போது மின்சாரம் தாக்கி இறந்த சென்னையைச் சேர்ந்த அதிமுக தொண்டரின்குடும்பத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ரூ.50,000 நிதியுதவி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும், அவரது மகன் திலீப் குமார் என்பவரும் அண்ணாநினைவு நாளன்று கொடியேற்ற முயற்சித்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கிபடுகாயமுற்றார்கள். இதில் திலீப் குமார் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இவரது குடும்பத்துக்கு ஜெயலலிதா ரூ.50,000 நிதியுதவி அளித்துள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதாவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திலீப் குமார் இறந்த சம்பவம் குறித்து அறிந்து வேதனையுற்றேன். அதிமுகவை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டதிலீப் குமாரின் மறைவால் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பு பேரிழப்பாகும்.
மகனை இழந்து, காயமுற்ற நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமகிருஷ்ணனின் குடும்பத்திற்குஎனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, திலீப் குமாரை இழந்து வாடும் ராமகிருஷ்ணனின்குடும்பத்திற்கு ரூ.50,000 குடும்ப நல நிதியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்தஅறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications