ஆண்டிப்பட்டி தேர்தலை ஒத்திவைக்க திமுக மீண்டும் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் முறைகேடுகள் நடந்திருப்பதால் ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தலைஒத்திவைக்க வேண்டும் என்று திமுக மீண்டும் தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தலைமைத் தேர்தல் கமிஷனர் ஜே.எம். லிங்டோவுக்கு ராஜ்யசபா திமுக எம்.பியான எஸ். விடுதலை விரும்பிஇன்று (செவ்வாய்க்கிழமை) எழுதிய கடிதத்தில் இக்கோரிக்கையை விடுத்துள்ளார். அக்கடிதத்தில்கூறியிருப்பதாவது:

ஆண்டிப்பட்டி தொகுதியில் வாக்காளர் பட்டியல் தயாரித்த பிறகு நாங்கள் அத்தொகுதியில் இதுகுறித்த ஒருகணக்கெடுப்பு நடத்தினோம்.

அப்போது நிலக்கோட்டை சட்டசபை தொகுதியைச் சேர்ந்த 40 வாக்காளர்களின் பெயர்கள் ஆண்டிப்பட்டி தொகுதிவாக்காளர் பட்டியலில் போலியாகச் சேர்க்கப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளோம்.

மேலும் புளியமம்கும்பை கிராமத்திலேயே வசிக்காத 50 பெயர்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

இவை தவிர வாக்களிப்பதற்குத் தகுதியில்லாத 18 வயதுக்குக் கீழே உள்ள 9 பேரின் பெயரும் வாக்காளர்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பதை நாங்கள் 100 சதவீதம் உறுதியாகக் கூறுகிறோம்.

எனவே இத்தகைய குறைபாடுகளைக் களையும் வரை ஆண்டிப்பட்டி தொகுதியில் தேர்தலை நடத்தக் கூடாது.உடனே இந்த இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று விடுதலை விரும்பி அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+