அயோத்தி விவகாரம்: நாளை காஞ்சி சுவாமிகளைச் சந்திக்கிறார் வி.எச்.பி. தலைவர்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் நாளை(புதன்கிழமை) காஞ்சி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆதரவு கேட்கவுள்ளார்.
கடந்த வார இறுதியில் திடீரென்று காஞ்சிபுரம் வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,ஜெயேந்திர சுவாமிகளைச் சந்தித்து ராமர் கோவில் விவகாரம் தொடர்பாக சுமார் 40 நிமிடங்கள் ஆலோசனைநடத்தினார்.
இதைத் தொடர்ந்து நாளை அசோக் சிங்கால் காஞ்சிபுரம் சென்று சங்கராச்சாரியாரிடம் ஆசி பெறுகிறார்.
இது தொடர்பாக சங்கராச்சாரியார் கூறும் போது,
பல பக்தர்கள் என்னை வந்து சந்தித்து செல்கின்றனர். அவர்கள் என்ன நோக்கத்திற்காக வருகின்றனர் என்றுஎனக்குத் தெரியாது.
நான் யாரையும் இந்த மடத்திற்கு வர வேண்டும் என்று அழைப்பதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications