தேர்தலை புறக்கணிக்க ஆண்டிப்பட்டி மக்களுக்கு மது எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை
சென்னை:
ஆண்டிப்பட்டி மக்கள் இடைத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மது எதிர்ப்பு இயக்கம்கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த அமைப்பின் கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆண்டிப்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு காந்தி பேரவைதலைவர் குமரி அனந்தன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மலிவு விலையை அமல்படுத்திய அரசுக்கு ஆண்டிப்பட்டி மக்கள் தங்களது கண்டனத்தைத் தெவிக்க வேண்டும்.அதை தெரிவிக்கும் விதமாக ஆண்டிப்பட்டி தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மலிவு விலை மதுவுக்கு இதுவரை 20 பேர் வரை பலியாகியுள்ளனர். மலிவு விலை மதுவை உடனடியாக அரசுவாபஸ் பெற வேண்டும்.
தமிழகத்தில் முழுமையான மது விலக்கை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என்று தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மக்கள் மது விலக்கு இயக்கம், தமிழ்நாடு காந்தி பேரவை, பெண்ணுரிமை இயக்கம், பெண்கள்போராட்டக் குழு, தேசிய தலித் உமைகள் பிரசாரக் குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications