நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ஆனந்த விகடன் ஆசிரியர் நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை:
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக "ஆனந்தவிகடன்" ஆசிரியர் பாலசுப்ரமணியம் மற்றும் "நெற்றிக்கண்"ஆசிரியர் மணி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
டான்சி தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை விமர்சிக்கும்வகையில் கட்டுரை எழுதியிருப்பதாக தமிழக அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ராஜஸ்தானில் இருந்து வெளியாகும் தைனிக் நவஜோதி, ஆனந்தவிகடன், நெற்றிக்கண் ஆகியபத்திரிக்கைகள் நீதித்துறையையும், நீதிமன்றத்தையும் அவமதிக்கு வகையில் கட்டுரைகள் எழுதியுள்ளனர் என்றுசந்திரன் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டி மற்றும் நீதிபதி சுப்புலட்சுமிஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பத்திரிக்கை ஆசிரியர்கள்நீதிமன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிட்டனர்.
இதன்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆனந்தவிகடன் பத்திரிக்கை ஆசிரியர் பாலசுப்ரமணியம்,நெற்றிக்கண் ஆசிரியர் மணி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
இருவரும் பதில் மனுத் தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் கோரினர். இதனால் வழக்கு விசாரணையை 3வாரங்களுக்குத் தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications