காஷ்மீர் பிரச்சனை: இந்தியாவுக்கு ரஷ்யா ஆதரவு
டெல்லி:
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கும் எப்போதும் தங்கள் ஆதரவு உண்டு என்று ரஷ்ய துணைப் பிரதமர் இல்யாகிளிபானோவ் இன்று (வியாழக்க்கிழமை) கூறினார்.
இந்தியாவுக்குச் சொந்தமான காஷ்மீர் மண்ணிலிருந்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் உடனடியாக வெளியேறவேண்டும் என்றும் கிளிபானோவ் கூறினார்.
இந்தியா கோரியுள்ள தீவிரவாதிகளையும் குற்றவாளிகளையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றும்பாகிஸ்தானை கிளிபானோவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்மூலம்தான் தீவிரவாதத்தை எதிர்க்கிறோம் என்ற நேர்மையான செயலைப் பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்கும்தெரியப்படுத்த முடியும் என்று அறிவுறுத்தினார் கிளிபானோவ்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்படக் கூடும் என்ற அமெரிக்கஉளவுத்துறையான சி.ஐ.ஏ. இயக்குநர் ஜார்ஜ் டெனட்டின் எச்சரிக்கை பற்றி கிளிபானோவிடம் நிருபர்கள் கேட்டனர்.
அதற்குப் பதிலளித்த கிளிபானோவ், சி.ஐ.ஏ. ஒரு அனுபவம் மிக்க பெரிய உளவுத் துறை என்றும் அது ஒன்றைக்கூறினால் அதற்கு அர்த்தம் இருக்கும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications