கிரையோஜெனிக் சோதனை வெற்றி: ஜனாதிபதி பாராட்டு
டெல்லி:
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாகச்சோதிக்கப்பட்டதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிரையோஜெனிக் எஞ்சின் தொழில்நுட்பத்தைத் தானும் தராமல் ரஷ்யாவையும் நமக்குத் தரவிடாமல் அமெரிக்காதடுத்து வந்தது. இதையடுத்து இந்திய விஞ்ஞானிகளே இதைப் பெரும் சவாலாக எடுத்துக் கொண்டுகிரையோஜெனிக் எஞ்சின் தயாரிப்பில் ஈடுபட்டனர்.
ஆரம்பத்தில் பலமுறை இந்த எஞ்சின் தயாரிப்பு தோல்வியடைந்து கொண்டே இருந்தது. கடந்த பல ஆண்டுகளாகஇஸ்ரோ விஞ்ஞானிகள் அரும்பாடுபட்டு கிரையோஜெனிக் எஞ்சினை வெற்றிகரமாகத் தயாரித்து விட்டனர்.
பின்னர் நேற்று மாலை இந்த கிரையோஜெனிக் எஞ்சின் வெற்றிகரமாகச் சோதித்தும் பார்க்கப்பட்டது. இந்தவெற்றியின் மூலம் கிரையோஜெனிக் தொழில்நுட்பம் பெற்றுள்ள அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும்ஜப்பான் ஆகிய நாடுகளின் வரிசையில் 6வதாக இந்தியாவும் சேர்ந்துள்ளது.
இந்நிலையில் கிரையோஜெனிக் எஞ்சின் சோதனை வெற்றி பெற்றதற்கு ஜனாதிபதி நாராயணன் தன்னுடையபாராட்டுக்களை இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தெரிவித்துள்ளார்.
கிரையோஜெனிக் எஞ்சினை வெற்றிகரமாகத் தயாரித்துள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் நம் நாட்டையேபெருமைக்குள்ளாக்கி விட்டார்கள் என்று இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் நாராயணன் கூறியுள்ளார்.
இந்த கிரையோஜெனிக் சோதனையின் வெற்றிக்காக இந்திய விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப வல்லுநர்களும்கடுமையாக உழைத்துள்ளனர் என்றும் நாராயணன் தன்னுடைய அறிக்கையில் கூறியுள்ளார்.
செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவுவதற்கான பி.எஸ்.எல்.வி. மற்றும் ஏ.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளைசொந்தமாகத் தயாரித்து வந்த இந்தியா, தற்போது அந்த ராக்கெட்டுகளை ஏவுவதற்குத் தேவையானகிரையோஜெனிக் எஞ்சின்களையும் சொந்தமாகத் தயாரிக்கும் திறனைப் பெற்று விட்டது.
இந்தியாவின் விண்வெளித் தொழில்நுட்பம் அமெரிக்காவின் விண்வெளித் தொழில்நுட்பத்தைவிட அதிகத் திறன்கொண்டிருப்பதாக சமீப காலமாகப் பேசப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications