இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூ. இணைப்பு: காலம்தான் பதில் சொல்லும் - நல்லக்கண்ணு

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தங்கள் கட்சி இணைவது பற்றி காலம்தான் பதில் சொல்லும் என்று இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் ஆர். நல்லகண்ணு இன்று (திங்கள்கிழமை) கூறினார்.

கோயம்புத்தூரில் இன்று நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின்போது நிருபர்களிடம்நல்லக்கண்ணு கூறியதாவது:

மார்க்சிஸ்ட் கட்சியுடன் நாங்கள் இப்போதைக்கு இணையப் போவதில்லை. ஆனால் நாட்டின் நலன்களைக்கருத்தில்கொண்டு 2 கட்சிகளும் விரைவில் இணைவது பற்றித் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனாலும் இணைப்பு பற்றி காலம்தான் பதில் சொல்லும்.

இணைப்பு விஷயம் குறித்து தலைவர்களிடையே "ஈகோ" பிரச்சனை உள்ளதாகக் கூறப்படுவது தவறு. கடந்த 30ஆண்டுகளாக 2 கட்சிகளின் இணைப்பு பற்றிப் பேசிக் கொண்டேதான் உள்ளோம்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டுமே இணைந்து பெரும் புரட்சியை உருவாக்க வேண்டும் என்று 2 கட்சித்தலைவர்களுமே விரும்புகின்றர்.

இந்த இணைப்பின் மூலம் காங்கிரஸ் கட்சியையும் மதவாதக் கட்சியான பாஜகவையும் நாங்கள் பிரம்மாண்டமாகஎதிர்க்க முடியும் என்றார் நல்லக்கண்ணு.

மக்கள் விரோத அரசாகச் செயல்படுவதாகக் கூறி சமீபத்தில்தான் இந்த 2 கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிமுகவுடனானஉறவைத் துண்டித்துக் கொண்டன. ஆண்டிப்பட்டி தொகுதியில் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் அவைஅறிவித்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+