பழனிபாபா கொலை வழக்கு: 4 ஆயுள் கைதிகளுக்கு ஜாமீன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பழனிபாபா கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 4 கைதிகளை சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீனில்விடுவித்தது.

பழனியைச் சேர்ந்த பழனிபாபா என்பவர் அகில இந்திய ஜிகாத் கமிட்டியின் தலைவர். இவர் கடந்த 1997ம் ஆண்டுஜனவரி மாதம் ஒரு மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தனர். இந்த வழக்கைவிசாரித்த கோவை செஷன்ஸ் நீதிமன்றம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவரைவிடுதலை செய்தும் தீர்ப்பு வழங்கியது.

ஆயுள் தண்டனை பெற்ற இந்த 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ஆயுள் தண்டனை பெற்றசுதாகரன், முரளி, திருஞானம், உதயன் ஆகிய 4 பேரும், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்களைத்தாக்கல் செய்தனர்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் வழக்கு முடியும் வரை ஜாமீனில்விட வேண்டும் அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

இந்த மனுக்களை நீதிபதிகள் என்.தினகர், பாக்யராஜ் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. பின்னர்அந்தக் கைதிகளை ரூ.10,000 சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு 2 நபர் ஜாமீனிலும் விடுதலை செய்யுமாறுநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அவர்கள் 4 பேரும் கடலூரில் தங்கியிருக்க வேண்டும் என்றும் கடலூர் புது டவுண் காவல் நிலையத்தில் தினமும்காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனைவிதித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+