மார்க்சிஸ்ட் கட்சியின் புதிய செயலாளரானார் வரதராஜன்
கோயம்புத்தூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தமிழக செயலாளராக என். வரதராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கோயம்புத்தூரில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில் இதுகுறித்து ஒரு தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ள சங்கரய்யாவின் பதவிக் காலம் முடிந்துவிட்டது.
இதனால் மார்க்சிஸ்ட் மாநாட்டில் வரதராஜன் புதிய செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு, அவருடன் 83 நிர்வாகக்குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
வரதராஜன் இதற்கு முன் மத்தியக் குழு உறுப்பினராக இருந்தார்.
தே.ஜ. கூட்டணி கட்சிகள் வெளியேற மார்க்சிஸ்ட் அழைப்பு:
இதற்கிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள திமுக, மதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள்அக்கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
தன்னுடைய மதவாத நடவடிக்கைகளால் நாட்டின் ஒற்றுமையை பாஜக குலைக்க முயற்சி செய்வதால், நாட்டின்ஒற்றுமைக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் பாஜகவை விட்டுவிட்டு இக்கட்சிகள் தேசிய ஜனநாயகக்கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications