பட்டுக்கோட்டை அருகே ஆற்றில் மூழ்கி மாணவன் சாவு
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே நண்பர்களுடன் ஆற்றில் குளித்த போது மாணவன் ஒருவன் அதில் மூழ்கி இறந்தான்.
பட்டுக்கோட்டையை அடுத்த ஒரத்தநாடு அருகே உள்ள மண்டலக்கோட்டையை சேர்நதவர் செல்வராஜ்.அவருடைய மகன் அன்புநாதன் (19).
இவன் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்து விட்டதால் மார்ச் மாதம் தேர்வு எழுதுவதற்காகபட்டுக்கோட்டையில் உள்ள ஒரு டுடோரியலில் உள்ள ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தான்.
சம்பவத்தன்று மாலை 4 மணி அளவில் நண்பர்களுடன் பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள நசுவினி ஆற்றுக்குகுளிக்க அன்புநாதன் சென்றான்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்றில் உள்ள ஒரு பள்ளத்தில் மூழ்கி அன்புநாதன் உயிருக்குப்போராடினான்.
அருகில் உள்ளவர்கள் அவனைக் காப்பாற்றி பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால்அவன் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications