திருவண்ணாமலை தலைமை தபால் நிலையத்தில் ரூ.2 லட்சம் கொள்ளை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தலைமை தபால் நிலையத்தில் ஜன்னலை உடைத்துப் புகுந்த கொள்ளையர் அங்கிருந்த ரூ.2லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றர்.
திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் செல்லும் பாதையில் தலைமை தபால் நிலையம் உள்ளது. இங்கு சுமார்150 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று (வியாழக்கிழமை) அதிகாலை இந்தத் தபால் நிலையத்தின் ஜன்னலை உடைத்து கொள்ளைக் கும்பல் ஒன்றுபுகுந்துள்ளது.
பின்னர் அங்கிருந்த ஒரு இரும்புப் பெட்டியை உடைத்து அதிலிருந்த ரூ.2 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்துச்சென்று விட்டது.
அருகிலிருந்த மற்றொரு இரும்புப் பெட்டியையும் அந்தக் கும்பல் உடைக்க முயற்சித்துள்ளது. ஆனால் அதைஉடைக்க முடியாததால் அதிலிருந்த ரூ.8 லட்சம் பணம் தப்பியது.
சம்பவம் குறித்து தகவலறிந்ததும் விரைந்து வந்த திருவண்ணாமலை போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துவிசாரித்தனர்.
கொள்ளையர்களைத் தேடும் வேட்டையும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications