அயோத்தி விவகாரம்: வி.எச்.பி. மீது கருணாநிதி பாய்ச்சல்
திருச்சி:
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பினால், நாட்டில்குழப்பம் நிலவும் அபாயம் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் பிரச்சாரத்திற்காக போகும் கருணாநிதி, வரும் வழியில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக திருச்சிக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வந்திருந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்திருப்பது நாட்டில் பலபதட்டமான சூழ்நிலையை உருவாக்கும் என்று அச்சமாக உள்ளது.
உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி தான் நிலத்தை கொடுக்க முடியும் என்று பிரதமர் வாஜ்பாய் உறுதியாக கூறியிருப்பதுபாராட்டத்தக்கது. வாஜ்பாயும், ஜனா.கிருஷ்ணமூர்த்தியும் அயோத்தி விவகாரத்தில் தங்கள் நிலையில் எந்தமாற்றமும் இல்லை என்று அறிவித்திருக்கிறார்கள்.
அயோத்தி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எந்த நெருக்குதலையும் திமுக ஏற்படுத்தாது.
பாஜக வகுப்பு வாதங்களைத் தூண்டிவிடுவதால் தேசிய ஜனநாயக் கூட்டணியில் இருக்கும் திமுக, மதிமுக, பாமககட்சிகள் அந்த கூட்டணியிலிருந்து விலகி வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருப்பதுஅவர்களுடைய விருப்பம். நாங்கள் பாஜக கூட்டணியில் தொடர்ந்து இருப்போம்.
காவிரி பிரச்சனையில் அதிமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருகிறது. இது குறித்துநடவடிக்கைகளை அதிமுக அரசு துரிதப்படுத்த வேண்டும்.
அச்சிரப்பாக்கம் தொகுதி இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் போட்டியிடுவார் என்றுகருணாநிதி கூறினார்.












Click it and Unblock the Notifications