இன்று ஜெ., கருணாநிதி, வைகோ பிரச்சாரம்
தேனி:
ஆண்டிப்பட்டியில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி,வைகோ, ராமதாஸ், இல.கணேசன் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
ஆண்டிப்பட்டி தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அங்கு பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.ஏற்கனவே அங்கு ஜெயலலிதா 3 நாட்களாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று ஒரே நாளில் முக்கிய அரசியல் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ,கிருஷ்ணமூர்த்தி, இல.கணேசன், திருநாவுக்கரசர் ஆகியோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
இதனால் அங்கு கலவரம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால். போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.இவர்களுக்கு வெவ்வேறு வழித்தடங்கள் அமைத்து கொடுப்பதில் போலீசார் திணறிக் கொண்டிருக்கின்றனர்.
கருணாநிதிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் இன்று ஒரு நாள் மட்டுமே பிரச்சாரம் செய்கின்றார். இன்றுமாலை 4.30 மணிக்கு வடுகப்பட்டியில் பிரச்சாரம் தொடங்கும் கருணாநிதி மேல்மங்கலம், ஜெயமங்கலம்,வைகைபுதூர், கண்டமனூர், கமலைக்குண்டிலும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.
பிறகு இரவு ஆண்டிப்பட்டியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி, ராமதாஸ், இல.கணேசன், திருநாவுக்கரசர்ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் இடங்களில் இருந்து அதிக தொலைவில், கருணாநிதி பிரச்சாரம் செய்யும்இடங்கள் அமையுமாறு திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications