பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறினால் திமுகவுக்கு ஆதரவு மார்க்சிஸ்ட்
சென்னை:
பாஜகவின் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறினால் கருணாநிதிக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும் என்றுஅக்கட்சியின் தமிழக செயலாளர் வரதராசன் கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாலும், மேலும் அங்கு முறையான தேர்தல் நடைபெறாதுஎன்பதாலும் தாங்கள் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கிரஸ், தமாகா, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருந்தன.
தீமையை எதிர்க்க வேண்டும் என்று கூறிக்கொண்டு தேர்தலைப் புறக்கணிப்பதாக கூறும் கட்சிகள் தங்கள் முடிவைபரிசீலிக்க வேண்டும் என்று கருணாநிதி இரு தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இது குறித்து வரதராசனிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:
கருணாநிதியின் இந்தக் கருத்து அவருடைய சந்தர்ப்பவாதத்தையே காட்டுகிறது. மதவாதிகளை ஆதரிக்கும் பாஜககூட்டணியில் இருந்து கொண்டு எங்களுக்கு அறிவுரை கூறுவது சரியல்ல. முதலில் பா.ஜ.கவில் இருந்து திமுகவெளியேறினால் அவர்களை நாங்கள் ஆதரிக்க தயாராக இருக்கிறோம் என்று வரதராசன் கூறினார்.












Click it and Unblock the Notifications