தேர்தலுக்குப் பின் தமிழகத்தின் தலையெழுத்து மாறும்: கருணாநிதி
தேனி:
ஆண்டிப்பட்டி தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்று (சனிக்கிழமை) கருணாநிதி பிரச்சாரத்தை துவங்கினார். மாலை 5.45க்குவடுகப்பட்டிக்கு சென்ற கருணாநிதி அங்கிருந்து கிராமம் கிராமமாக சென்று பிரச்சாரம் செய்தார்.
வடுகப்பட்டியில் காரில் அமர்ந்தபடியே இருந்து கருணாநிதி பேசியதாவது:
வடுகப்பட்டிக்கு நான் புதியவன் அல்ல. தேர்தல் நேரத்தில் மட்டும் வருபவன் அல்ல.
இந்த தேர்தல் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றும் தேர்தல். தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று யாரையும்நான் கூறவில்லை. தேர்தலில் உங்கள் வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வைத்து வைகை சேகரைவெற்றி பெறச் செய்யத்தான் வந்துள்ளேன்.
அதிமுகவுக்கு சிலர் விலை போய் உள்ளனர் என்று கேள்விப்பட்டேன். அவர்களுக்கு பாடம் புகட்டும் வகையில்வைகை சேகரை வெற்றி பெற செய்யுங்கள்.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்து விடுவார். மேலும் ரேஷன்அரிசியின் விலையையும் உயர்த்தி விடுவார்.
திமுக ஆட்சியில் தான் வருசநாடு முதல் பல கிராமங்களுக்கு தார்சாலைகள், சிமெண்ட் சாலைகள் போடப்பட்டனஎன்று கருணாநிதி கூறினார்.
பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை மதுரையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயில்மூலம் கருணாநிதி சென்னைக்குக் கிளம்பினார்.












Click it and Unblock the Notifications