ஜெ.க்கு இ-மெயிலில் கொலை மிரட்டல் விடுத்த மாணவனுக்கு ஜாமீன்
நாகர்கோவில்:
ஜெயலலிதாவுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்த நாகர்கோவில் பள்ளி மாணவன் ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கும், கல்வி அமைச்சர் தம்பித்துரைக்கும் சமீபத்தில் இ-மெயில் மூலம்கொலை மிரட்டல் விடப்பட்டது. போலீஸ் விசாரணையில் நாகர்கோவிலில் இருந்து இந்த மெயில் அனுப்பப்பட்டதுதெரிய வந்தது.
நாகர்கோவில் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலைச் சேர்ந்த பிரபல டாக்டர் கணேசன் என்பவரின் மகன் பாலுஎன்பவர் தான் மிரட்டல் இ-மெயில்களை அனுப்பியிருந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இம்ப்ரூவ்மென்ட் தேர்வு குறித்து சமீபத்தில் அரசு வெளியிட்ட அறிக்கையினால்தான் அப்படி அனுப்பியதாக பாலுகூறினார். இதையடுத்து பாலு கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது ஜாமீன் மனு மீதான விசாரணை சனிக்கிழமை திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு வந்தது. நீதிபதிமுத்துக்கிருஷ்ணன் பாலுவை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தார்.
இதன்படி பாலு தினமும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் நாகர்கோவில் குற்றப்பிரிவு எஸ்.பி. முன்புஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications