பிஜி: ஆட்சியை கைப்பற்றிய ஜார்ஜ் ஸ்பைட்டுக்கு ஆயுள்
சுவா:
கடந்த மே 2000ல் பிஜி நாட்டியில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மகேந்திர செளத்ரி தலைமையிலானஆட்சியைக் கவிழ்த்த ஜார்ஜ் ஸ்பைட்டுக்கு இன்று (திங்கள்கிழமை) அந்நாட்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தூக்குத்தண்டனையை அந்நாட்டு அதிபர் ஜோசபோ இலோய்லோ ஆயுள் தண்டனையாகக் குறைக்க உத்தரவிட்டார்.
தெற்கு பசிபிக் கடலில் உள்ள சிறிய தீவு பிஜி. இந்திய வம்சாவழியினர் பெருமளவில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கும் பிஜியைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கும் இடையே காலம்காலமாக பிரச்சினை இருந்துவருகிறது.
கடந்த 2000ம் ஆண்டு மே 19ம் தேதி பிரதமர் மகேந்திர செளத்ரியின் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான பிஜிஇனத்தவர்கள் கூடி, அவருக்கு எதிராக கோஷம் இட்டனர்.
புரட்சிக்காரர்களின் தலைவரான ஜார்ஜ் ஸ்பைட், பிஜி இனத்தவர் ஒவ்வொருவரின் சார்பிலும் நான் இந்த நாட்டின்ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். விரைவில் அரசியல் சட்டம் திருத்தப்படும். இடைக்கால அரசும்நிறுவப்படும் என்றார்.
அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் சாம் ஸ்பைட்டின் மகனான ஜார்ஜ் ஸ்பைட், மொத்தம் 56 நாட்கள்செளத்ரியையும் அவருடைய அமைச்சர்களையும் வீட்டுக் காவலில் வைத்திருந்தார்.
இதையடுத்து பிஜி ராணுவத்தினர் பிரதமர் மாளிகையையும் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டு,செளத்ரியையும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களையும் மீட்டனர்.
பிரதமரையும் அமைச்சர்களையும் வீட்டுக் காவலில் வைத்து ஆட்சியைத் தம் கையில் எடுத்துக் கொண்டதுதொடர்பாக ஜார்ஜ் ஸ்பைட் உள்பட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜார்ஜ்ஸ்பைட்டுக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் ஸ்காட், அவரைச் சாகும்வரை தூக்கிலிட வேண்டும்என்றும் உத்தரவிட்டார்.
தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஜார்ஜ் ஸ்பைட்டின் மனைவி கதறி அழுதார். ஆனால்அருகிலிருந்த ஜார்ஜ் ஸ்பைட்டோ எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தார்.
தன்னுடைய ஆதரவாளர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஜார்ஜ் ஸ்பைட், பின்னர்உடனடியாக கோர்ட்டிலிருந்து சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதற்கிடையே ஜார்ஜ் ஸ்பைட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக்குறைக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞரான ரோன் கேனான் அந்நாட்டு ஜனாதிபதியிடம் கோரிக்கைமனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஜார்ஜ் ஸ்பைட்டுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்உத்தரவில் ஜனாதிபதி ஜோசபோ இலோய்லோ கையெழுத்திட்டுள்ளதாக அட்டார்னி ஜெனரல் கோரினியாசி பாலேஇன்று பிற்பகல் கூறினார்.
பிஜி நாட்டைப் பொறுத்தவரை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனைபெற்றுவிட்டு வெளியே வந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications