கோவையில் ரூ.16 கோடி மோசடி செய்த கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் கைது
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூரில் டேட்டா பிராசஸிங் கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வேலை தருவதாக கூறி ரூ.16 கோடி மோசடிசெய்த நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.
கோயம்புத்தூரில் ஏ.டி.எம். எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தை நிறுவி டேட்டாபிராசஸிங் வேலை தருவதாக கூறி இளைஞர்களிடம் பணம் பெற்றுள்ளார் அருண் சின்னசாமி என்பவர்.
போலீஸ் இந்த போலி நிறுவனத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடித்தது. ஆனால் சின்னசாமியோஉடனடியாகத் தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து சின்னசாமியின் பெயரில் பாங்கில் இருந்த ரூ.60 லட்சத்தை போலீசார் முடக்கினர். இவர் ரூ.16 கோடிவரை மோசடி செய்துள்ளதாக தெரிகிறது.
தலைமைறைவான சின்னசாமி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு காங்கேயத்தில் உள்ள தன் மாமனார் வீட்டிலுள்ளதன் குழந்தைகளைப் பார்க்க சென்றபோது, அவரைப் போலீசார் கைது செய்தனர்.
சின்னசாமியிடமிருந்து 2 கார்கள், 2,500 பிளாப்பிகள், 180 சிடிக்கள், அமெரிக்க டிராவலர்ஸ் செக், நைஜீரீயாமற்றும் கென்ய நாட்டு கரன்சிகள், ரூ.2 லட்சத்துக்கான டெபாசிட் பத்திரம் மற்றும் ரூ.2.5 லட்சத்திற்கான டி.டி.ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.30 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் மோசடி செய்தபணத்தில் சின்னசாமியும், பெங்களூரில் உள்ள கோபாலகிருஷ்ணனும் சேர்ந்து ரூ.3 கோடிக்கு சென்னையில் உள்ளகம்பெனியின் ஷேர்களை வாங்கியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரியான ஆதாரம் கிடைத்தவுடன் பெங்களூரில் உள்ள கோபாலகிருஷ்ணனையும் போலீசார் கைது செய்வார்கள்என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications