மணலி போலீஸ் காலனியில் பணம், நகை கொள்ளை
சென்னை:
மணலியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் புகுந்த கும்பல் ஒன்று 4 காவலர்கள் வீட்டில் கொள்ளையடித்து தப்பிச்சென்றது.
சென்னை அருகே உள்ள மணலியில் புதிதாகக் கட்டப்பட்ட போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்தக் குடியிருப்பில்சுமார் 150 காவலர்கள் தங்கள் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த குடியிருப்பில் உள்ள சில காவலர்கள் பரங்கிமலைக்கு துப்பாக்கிச் சுடும்பயிற்சிக்கு சென்றனர். இந்த தகவலை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் நேற்று அந்த குடியிருப்பில்புகுந்துள்ளனர்.
அந்தக் குடியிருப்பில் இருந்த 4 வீடுகளில் புகுந்து பட்டுப்புடவை, தங்க நகைகள், ரொக்கப்பணம் ஆகியவற்றைஅந்தக் கொள்ளையர்கள் திருடிக் கொண்டு ஓடிவிட்டனர்.
அக்கம்பக்கம் இருப்பவர்கள் சத்தம் கேட்டால் முழித்துக் கொள்வர் என்று எண்ணி அவர்கள் வீட்டின் கதவைவெளிப்புறமாக தாளிட்டு கொள்ளையடித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் ஒருவர். இது குறித்துபோலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீசார் குடியிருப்புப் பகுதியிலேயே இந்தக் கொள்ளை நடந்திருப்பது மணலி பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications