கண்ணி வெடியில் சிக்கி 16 பாக். ராணுவத்தினர் பலி
ஜெய்சால்மர்:
ராஜஸ்தான் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கி 16 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் பீகானேர் அருகில் இந்திய-பாகிஸ்தான் எல்லை உள்ளது. இங்குள்ள எல்லை பாதுகாப்பு படைசோதனை சாவடிக்கு அருகில் உள்ள எல்லைக் கோட்டருகே பூமியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கண்ணிவெடிகள் வெடித்து சிதறியதில் 3 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இதே போல் ஸ்ரீநகர் அருகே அருகே உள்ள எல்லைக்கோட்டருகேயும் பூமியில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடிகள் வெடித்து சிதறியதில் 13 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பலியாகினர்.
மேலும் ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். இத்தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தன.
கடந்த 2 மாதத்துக்கு முன்பு இதே போல் கண்ணி வெடிகள் வெடித்ததில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 60 பேர்உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications