ஜெ.க்கு எளிதான வெற்றி: சுவாமி உறுதி
கோயம்புத்தூர்:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா மிக எளிதாக வெற்றி பெறுவார் என்று தமிழக ஜனதாக் கட்சித் தலைவர்சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
கோயம்புத்தூரில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவுக்கு வலுவான போட்டியாளர்கள் யாரும் இல்லை. தற்போது ஜெயலலிதாவுக்குஎதிராக போட்டியிடும் வேட்பாளர்களில் யாருமே சரியான போட்டியாளராக இல்லை. எனவே ஜெயலலிதா அங்குஎளிதில் வெற்றி பெறுவார்.
பொதுவான வேட்பாளரை நிறுத்தலாம் என்று நானும் இன்னும் பலரும் கருணாநிதியிடம் கோரிக்கை விடுத்தோம்.ஆனால் எங்களது கருத்தை நிராகரித்த கருணாநிதி தனியாகவே தன்னுடைய திமுக வேட்பாளரை அறிவித்தார்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் வெற்றி உறுதியாகி விட்ட நிலையில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் என்றுஎதிர்க் கட்சிகளுக்கு கருணாநிதி கோரிக்கை விடுக்கிறார். ஆனால் காலம் கடந்து விட்டதால் அவரது கோரிக்கைஎடுபடாது என்றார் சுவாமி.












Click it and Unblock the Notifications