24ம் தேதி ஜெ. பிறந்த நாள்: ஆண்டிப்பட்டி பரிசாகுமா?
சென்னை:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 54-வது பிறந்த நாளையொட்டி 2 நாட்களுக்கு தமிழகம்முழுவதிலும் ஏழை மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை வழங்க அதிமுக ஏற்பாடு செய்துள்ளது.
வருகிற 24ம் தேதி ஜெயலலிதா தனது 54வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அன்றுதான் ஆண்டிப்பட்டிதேர்தல் முடிவுகள் வெளியாகும் நாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டிப்பட்டியில் எப்படியும் ஜெயலலிதா வெற்றி பெறுவார் என்று நம்பும் அதிமுகவினர், அத்தொகுதியையேஅவருக்குப் பிறந்தநாள் பரிசாக அவர்கள் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளிலும் ஜெயலலிதாவின் பிறந்த நாளை தமிழகம் எங்கும் சிறப்பாககொண்டாட அதிமுக முடிவு செய்துள்ளது.
கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள், இலவச மருத்துவ முகாம்கள் ஆகியவற்றிற்குஅதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
இதுதவிர ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள், ஊனமுற்றோருக்கு 3 சக்கர சைக்கிள்கள், சலவைத்தொழிலாளர்களுக்கு சலவைப் பெட்டிகள், மூக்குக் கண்ணாடிகள், ஊன்றுகோல்கள், இலவச வேட்டி, சேலைஆகியவை வழங்கப்படவுள்ளது.
இதுதவிர ரத்ததான முகாம்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதிலும்பொதுக்கூட்டங்களுக்கும் அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையில் அமைச்சர்கள் பலர் இந்தப்பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications