நாளை காலை 8 மணிக்கு தேர்தல் ஆரம்பம்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதியில் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத் தொடங்கும் தேர்தல் மாலை 5 மணிக்குமுடிவடைகிறது.
மொத்தம் 216 வாக்குச் சாவடிகளில் சுமார் 2,10,000 பேர் தங்கள் வாக்குளைப் பதிவு செய்யவுள்ளனர்.
தேர்தலை சுமூகமாக நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழகத்தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.
வாக்குச்சாவடிகளுக்கு மின் வாக்குப்பதிவு எந்திரங்கள், அடையாள மை உள்ளிட்ட பொருள்களைக்கொண்டுபோய் சேர்க்கும் பணி இன்று இரவுக்குள் முடிவடைந்துவிடும் என்று கூறிய சாரங்கி, மொத்தம் 900 பேர்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் கண்டிப்பாக வாக்களிக்க முடியாது என்றும் சாரங்கிகூறியுனார்.
வாக்குப்பதிவின்போது வன்முறையைத் தூண்டிவிட சதி நடப்பதாக திமுகவினரும் அதிமுகவினரும்ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இதையடுத்து ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் வரலாறு காணாத அளவுக்குப் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
2,000 மத்திய ரிசர்வ் படையினர் உள்பட 5,000க்கும் மேற்பட்ட போலீசார் ஆண்டிப்பட்டி தொகுதியில்குவிக்கப்பட்டுள்ளனர். தொகுதி முழுவதும் ரோந்துப் பணியை நேற்றே அவர்கள் தொடங்கிவிட்டனர்.
தேவைப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விரோதிகளைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறுதேனி மாவட்ட காவல்துறைத் தலைவருக்கு தமிழக டி.ஜி.பி. நெய்ல்வால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்ததையடுத்து, ஒலிபெருக்கிகளெல்லாம் கழற்றப்பட்டுஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் பெரும் அமைதி நிலவுகிறது.
ஆனாலும் வாக்காளர் அடையாளச் சீட்டுகளைக் கொடுக்கும் சாக்கில் அதிமுக, திமுக, மதிமுக மற்றும் புதியதமிழகம் கட்சிகளின் தொண்டர்கள் கடைசி நேர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications