எகிப்து ரயிலில் தீ: 215 பேர் பலி
அல் அயத்:
எகிப்து நாட்டில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் 215 பேர் பரிதாபமாக இறந்தனர்.
இந்த நீண்ட விடுமுறைக்காக இன்று (புதன்கிழமை) அதிகாலை கெய்ரோவில் இருந்து தெற்கு நோக்கி ஒருபயணிகள் ரயில் புறப்பட்டது. இதில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்லும் ஏராளமான மக்கள் பயணம்செய்தனர்.
இந்த ரயில் கெய்ரோவில் இருந்து 70 கி.மீ. தூரத்தில் உள்ள அல் அயத் என்ற இடத்துக்குச் சென்றபோது திடீரெனதீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 7 ரயில் பெட்டிகள் முழுமையாக எரிந்தன.
தீயணைப்புப் படையினரும், போலீசாரும் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 100பேரின் சடலங்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 215ஐத்தொட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்த ரயிலில் டீ விற்ற ஒருவர் பயன்படுத்திய கேஸ் சிலிண்டர் வெடித்ததால்தான் இந்தத் தீவிபத்து ஏற்பட்டதாகக்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications