தமிழக கட்சிகளை உடைக்க அதிமுக சதி: இளங்கோவன்
சென்னை:
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உடைக்க அதிமுக சதி செய்து கொண்டிருப்பதாக மாநில காங்கிரஸ்தலைவர் இளங்கோவன் இன்று (புதன்கிழமை) கூறினார்.
இன்று நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
எங்களுடைய காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உடைப்பதற்குஅதிமுக சதி செய்து கொண்டிருக்கிறது.
அதிமுகவைச் சேர்ந்த கே.ஏ. செங்கோட்டையனும் அமைச்சர் தம்பிதுரையும்தான் இந்தச் செயல்களைத்தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
அத்தகைய அதிமுகவின் ஸ்போக்ஸ்பேர்சனாகத்தான் (செய்தித் தொடர்பாளர்) தங்கபாலு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். விரைவில் அவர் அந்தக் கட்சியிலேயே ஐக்கியமாகி விடுவார்.
சுய லாபத்துக்காக காங்கிரஸ் கட்சியைக் குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கும் தங்கபாலுவைக்கட்சியிலிருந்து விலக்குவது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் விரைவில் நடவடிக்கை எடுக்கும்.
ஆண்டிப்பட்டியில் நாளை நடைபெறும் தேர்தல் ஜனநாயக முறைக்கு மாறாகத்தான் நடக்கும் என்பதில்எந்தவிதமான சந்தேகமும் இல்லை என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications