இந்திய ராணுவத்தில் ஊடுருவ முயலும் தீவிரவாதிகள்
டெல்லி:
இந்திய ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. முயன்றுவருகிறது.
இந்திய ராணுவத்தில் தீவிரவாதிகளைச் சேரச் செய்து அவர்கள் மூலம் அத்வானி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களைக் கொல்லபாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதை உளவுப் பிரிவுகள் கண்டுபிடித்துள்ளன.
சில மாதங்களுக்கு முன் காஷ்மீரில் அனந்த் நாக் மாவட்டத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த குர்ஷித் அகமத் கனாய்என்ற தீவிரவாதி கொல்லப்பட்டான். இவனைப் பற்றி விசாரணை நடத்தியபோது அவன் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மத்தியரிசர்வ் போலீஸ் படையில் வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
அதே போல இவனுடன் ரிசர்வ் போலீஸ் படையில் சேர்ந்த அஸார் கான் என்பவனை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல்காணவில்லை. இவன் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தவன். ஆனால், திருந்திவிட்டதாக உறுதியளித்ததால் ரிசர்வ்போலீஸ் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டான்.
ஆனால், இவன் மீண்டும் தீவிரவாதத்துக்கே திரும்பி விட்டது தெரியவந்துள்ளது. இவனுக்குத் தரப்பட்ட துப்பாக்கி,குண்டுகளுடன் இவன் ரிசர்வ் போலீஸ் படையில் இருந்து ஓடிவிட்டான். இவன் உத்தராஞ்சல் மாவட்டத்திலும் காஷ்மீரிலும்நடமாடி வருவது தெரியவந்துள்ளது. இவன் மேலும் சில தீவிரவாதிகளின் உதவியுடன் முக்கியத் தலைவர்களைத் தீர்த்துக்கட்டும்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளான்.
தீவிரவாதிகளின் வயர்லெஸ் செய்தித் தொடர்பை ராணுவமும் உளவுப் பிரிவினரும் இடைமறித்துக் கேட்டபோது இந்த விவரம்தெரியவந்தது.
இதையடுத்து ராணுவத்தில் இருந்தோ, மத்தியப் படைகளில் இருந்தோ ஓடிப் போனவர்கள் குறித்த விவரங்களை சேகரிக்குமாறுமாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்கள் ஐ.எஸ்.ஐ. உத்தரவுப்படி தான் இந்திய பாதுகாப்புப் படைகளில் சேருவதாகவும் உளவுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.இந்திய பாதுகாப்புப் படைகள் மேற்கொள்ளும் பயிற்சி முறைகள், ராணுவத்தினரின் ஆயுதங்கள், திட்டங்கள், ரகசிய தாக்குதல்கள்ஆகிய விவரங்களை சேகரிக்க தீவிரவாதிகளை பாதுகாப்புப் படைகளுக்குள் ஊடுருவச் செய்து வருகிறது பாகிஸ்தான்.
இதையடுத்து தீவிரவாதிகள்யாரும் திருந்திவிட்டதாகக் கூறிக் கொண்டு வந்தாலும் அவர்களை படைகளில் சேர்ப்பதை மத்தியஅரசு நிறுத்தி வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications