இலங்கை: கொலை வழக்கில் மாஜி அமைச்சர் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தல் வன்முறையின் போது 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பாகஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனுருத்தா ரத்வதே கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மாமாவும் முன்னாள் அமைச்சருமான ரத்வதேக்கும் இந்தகொலைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இப்போது அந்த கொலைகளை அவர் நடத்தியிருப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததைஅடுத்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அவரது வீட்டில்வைத்து இலங்கை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.
இன்று காலை அவரை கண்டியில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவரை நீதிபதி மார்ச் 4ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications