இலங்கை: கொலை வழக்கில் மாஜி அமைச்சர் கைது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த தேர்தல் வன்முறையின் போது 10 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது தொடர்பாகஇலங்கையின் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் அனுருத்தா ரத்வதே கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் டிசம்பர் 5ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது நடந்த பெரும் வன்முறையில் 10முஸ்லிம் காங்கிரஸ் தொண்டர்கள் கண்டியில் படுகொலை செய்யப்பட்டனர்.

இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மாமாவும் முன்னாள் அமைச்சருமான ரத்வதேக்கும் இந்தகொலைகளுக்கும் சம்பந்தம் இருப்பதாக அப்போதே செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது அந்த கொலைகளை அவர் நடத்தியிருப்பதற்கான தகுந்த ஆதாரங்கள் கிடைத்ததைஅடுத்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு அவரது வீட்டில்வைத்து இலங்கை போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.

இன்று காலை அவரை கண்டியில் உள்ள நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அவரை நீதிபதி மார்ச் 4ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+