ஆண்டிப்பட்டியில் 4 நாட்களுக்கு மதுக் கடைகள் மூடல்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மதுக் கடைகளை 4 நாட்களுக்கு மூட வேண்டும் என்றுதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல், திருவிழா என்று வந்துவிட்டாலே "குடிமகன்"களின் தொல்லைகளும் முன்பெல்லாம் சகஜமாக பெருகிவரும்.
இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக தேர்தலின்போதும் வாக்கு எண்ணிக்கையின்போதும் மதுக் கடைகளைமூடிவிட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
அதன்படி ஆண்டிப்பட்டி தேர்தலையொட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை), இன்று மற்றும் நாளை (தேர்தல் நாள்,பிப்.21) ஆகிய 3 நாள்களிலும் இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விஸ்கி, பிராந்தி மற்றும் ஒயின் ஆகியமதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 24ம் தேதி அன்றும் மதுக் கடைகளை மூட வேண்டும் என்றும் தேர்தல்கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்பையும் மீறி மதுக் கடைகளைத் திறந்து வைத்திருந்தால், அக்கடைகளின் உரிமையாளர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications