ஷேக் ஒமரின் வாக்குமூல விவரத்தை தர பாக். மறுப்பு
டெல்லி:
பாகிஸ்தானில் கைதான முக்கிய தீவிராவாதி ஷேக் ஒமர் கராச்சி நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தின்விவரங்களை இந்தியாவிடம் தர பாகிஸ்தான் மறுத்துவிட்டது.
அமெரிக்க பத்திரிக்கை நிருபரான டேனியல் பேர்ல் கடத்தல் தொடர்பாக, ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதஇயக்கத்தைச் சேர்ந்த ஷேக் ஒமர் சய்யீது சமீபத்தில் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டான்.
அக்டோபர் 1ல் காஷ்மீர் சட்டசபை, டிசம்பர் 13ல் தில்லி நாடாளுமன்றம் ஆகியவை தாக்கப்பட்டதற்கும் தனக்கும்தொடர்பு உள்ளதாக கராச்சி நீதிமன்றத்தில் ஷேக் ஒமர் ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் நாளிதழ்களில் செய்திகள்வெளியாகின.
இந்நிலையில் சர்வதேச சட்டப்படியும், பயங்கரவாதத்துக்கு எதிரான ஒருமித்த நடவடிக்கையின் அடிப்படையிலும்ஷேக் ஒமர் வழங்கிய வாக்குமூலத்தின் விவரங்களை பாகிஸ்தான் இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்றுவெளியுறவுத் துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது.
இதற்காக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் துணைத் தூதர் ஜலீல் அப்பாஸ் கிலானியை நேற்று அழைத்தவெளியுறவுத்துறை அமைச்சகம், ஷேக் ஒமரின் வாக்குமூல விவரங்களை வழங்க வேண்டும் என்று வாய்மொழிமூலமாக வேண்டுகோள் விடுத்தது.
ஆனால் ஷேக் ஒமரின் வாக்குமூல விவரங்களை அளிப்பதற்கு பாகிஸ்தான் மறுத்துவிட்டது.












Click it and Unblock the Notifications