ஆண்டிப்பட்டியிலிருந்து திமுகவினரை வெளியேற்ற போலீசார் முயற்சி: ஆளுநரிடம் திமுக புகார்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் கள்ள ஓட்டுப் போடுவதற்கு வசதியாக அங்குள்ள திமுகவினரை வெளியேற்றபோலீசார் முயற்சி செய்து கொண்டிருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி இன்று (புதன்கிழமை) கூறினார்.
இதுகுறித்து இன்று நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள் மற்றும்தொண்டர்களை வெளியேற்றும் முயற்சியில் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் முயன்றுவருகின்றனர்.
பின்னர் போலீசாரின் துணையுடனேயே அங்குள்ள வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுப் போட அதிமுகவினர் சதிசெய்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் ஐ.ஜி. டோக்ராவிடம் திமுக சார்பில் பொன் முத்துராமலிங்கம் தலைமையில் பலரும் புகார்கொடுத்துள்ளனர்.
ஆனாலும் கீழ்மட்டப் போலீசார் திமுகவினரை வெளியேற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நாங்கள்தான் அங்கு வன்முறையைத் தூண்டுவதற்குச் சதி செய்து வருகிறோம் என்று ஜெயலலிதாகுற்றம் சாட்டியுள்ளார். திமுக மீது பிறகு பழி சுமத்த வேண்டும் என்பதற்காகவே இப்போது இதுபோன்றகாரணங்களை அவர் இப்போதே தேடிவைத்துக் கொள்கிறார் என்றார் கருணாநிதி.
ஆளுநரிடம் ஸ்டாலின் புகார்:
இதற்கிடையே ஆண்டிப்பட்டி தொகுதியில் உள்ள திமுகவினரை போலீசார் வெளியேற்ற முயல்வது குறித்து தமிழகஆளுநர் ராமமோகன் ராவிடம் சென்னை மாநகர மேயர் ஸ்டாலின் இன்று புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார்.
திமுக இளைஞரணித் தலைவருமான ஸ்டாலின், ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்தபின் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுகவினர் இந்த அராஜகச் செயல்கள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநரைச் சந்தித்து ஒரு மனுவைக்கொடுத்துள்ளோம்.
கடந்த மாதம் அக்டோபர் மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுகவினர் நடத்திய பல வன்முறைச்சம்பவங்களைப் பற்றி ஆளுநரிடம் எடுத்துக் கூறினேன்.
கண்டமனூரில் 1,000க்கும் மேற்பட்ட புதிய அஞ்சலகச் சிறு சேமிப்புக் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதற்கான பாஸ் புத்தகத்தைக் காண்பித்து கள்ள ஓட்டுகளைப் போட அதிமுகவினர் முயற்சி செய்து வருவதையும்ஆளுநரிடம் கூறினேன்.
அனைத்தையும் கூர்ந்து கேட்ட ஆளுநர், இது தொடர்பாக உறுதியாக நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார் என்றுஸ்டாலின் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications