மதிமுகவுக்கு பிள்ளையார் சுழி போடுங்கள்: வைகோ இறுதிப் பிரச்சாரம்
ஆண்டிப்பட்டி:
2006ம் ஆண்டில் தமிழகத்தில் மதிமுக ஆட்சியைப் பிடிக்கப் போவது உறுதி. அதற்கு பிள்ளையார் சுழி போடும் வகையில்ஆண்டிப்பட்டியில் மதிமுகவைஆதரிக்க வேண்டும் என வைகோ கோரிக்கை விடுத்தார்.
ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலுக்கான தனது கட்சியின் வேட்பாளர் ஜெயச்சந்திரனுக்கு ஆதரவாக பல்வேறு குக்கிராமங்களிலும்வைகோ தீவிர பிரச்சாரம் செய்தார்.
அவர் கூறுகையில்,
கடந்த சட்ட சபைத் தேர்தலில் கருணாநிதி எங்களை கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற்றினார். வெற்றிகிடைக்காது என்று தெரிந்தும் போட்டியிட்டோம். எங்களுக்கு வாக்குகளையும் தந்தீர்கள். அதற்காக நன்றி.
அந்தத் தேர்தலில் மதிமுக வெல்லாது. அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என்று அதிமுகவை ஆட்சிக்குத்தேர்ந்தெடுத்தீர்கள். இப்போது நிலைமை மாறிவிட்டது. கடந்த தேர்தலில் அதிமுகவுடன் இருந்து கம்யூனிஸ்ட்கள்
இந்தத் தேர்தலை இந்தியாவே கவனித்துக் கொண்டிருக்கிறது. இங்கு ஏதோ திமுகவும் அதிமுகவும் மட்டும் போட்டியிடுவதுபோன்ற ஒரு பிரம்மையை சிலர் உருவாக்குகிறார்கள்.
இந்தப் போர்க்களத்தில் நாங்கள் நிராயுதபாணிகளாக நிற்கிறோம். இது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் அல்ல. அரசியல்மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல். மாற்றத்தை விரும்புவோர் எங்களை ஆதரிக்க வேண்டும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications