வாக்குப்பதிவைக் கண்காணிக்க வீடியோ காமிராக்கள்
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு வீடியோ காமிரா வாக்குப் பதிவு நிகழ்ச்சிகளைப் படம்பிடிக்கும் என்று தமிழக தலைமை தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறினார்.
ஆண்டிப்பட்டி தேர்தலின்போது வன்முறைச் சம்பவங்கள் நடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக தமிழக உள்துறைச்செயலாளர் நரேஷ் குப்தா நேற்று (செவ்வாய்க்கிழமை) கூறினார்.
பயங்கர ஆயுதங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குள் புகுந்து அங்குள்ள மின் வாக்குப் பதிவு எந்திரங்களையும்உடைப்பதற்கு அந்த சமூக விரோதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் நரேஷ் குப்தா கூறியிருந்தார்.
இந்நிலையில் வாக்குப்பதிவின்போது இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு 10 வாக்குசாவடிகளுக்கு ஒரு வீடியோ காமிரா வீதம் வாக்குப்பதிவுகள் அனைத்தும் படம்பிடிக்கப்படும் என்று சாரங்கி இன்றுகூறினார்.
வாக்களிக்க வருபவர்களை ஆட்டோ, கார், டிராக்டர் போன்ற வாகனங்களில் கொண்டு வந்து விடுபவர்கள் மீதுகடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த சாரங்கி, அந்த வாகனங்களும் பறிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications