For Quick Alerts
For Daily Alerts
Just In
திருவள்ளூர் அருகே கோவில் யானை சாவு
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் வீரராகவசாமி கோவிலில் வசித்து வந்த கிருஷ்ணர் என்ற யானை உடல்நலக் குறைவுகாரணமாக இறந்தது.
இந்தக் கோவில் அகோபில மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அகோபில மட ஜீயரின் அன்பைப் பெற்றதுகிருஷ்ணன் யானை.
ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோவில் ராஜகோபுரம் கட்டும் பணியின்போது கிருஷ்ணன் யானையும் கலந்து கொண்டுமரங்களை எடுத்து வந்து வைப்பது உள்ளிட்ட பல பணிகளில் பங்காற்றியது.
சில நாட்களாக கிருஷ்ணன் யானைக்கு உடல்நிலம் சரியில்லை. இதையடுத்து வண்டலூர் உயிரியல்பூங்காவிலிருந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனளிக்காது புதன்கிழமை காலை 7 மணிக்கு யானை இறந்தது. கோவில்வளாகத்திற்குள்ளேயே கிருஷ்ணன் யானை அடக்கம் செய்யப்படுகிறது.
Comments
Story first published: Thursday, February 21, 2002, 5:30 [IST]