அமைதியாக நடந்து முடிந்தது ஆண்டிப்பட்டி தேர்தல்: 65 சதவீதம் வாக்குப்பதிவு
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் வாக்குப் பதிவு எந்தவிதமான வன்முறையும் இல்லாமல் அமைதியாக நடந்து முடிந்தது.
இந்தத் தொகுதியில் 65 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநிலத் தேர்தல் ஆணையர் மிருத்யுத்ய் சாரங்கிசென்னையில் நிருபர்களிடம் தெரிவித்தார். இரண்டு இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள்செயல்படுவதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் உடனடியாக அந்த எந்திரங்கள் மாற்றப்பட்டு தேர்தல் தொடர்ந்துநடத்தப்பட்டதாகவும் கூறினார்.
காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. வாக்குப் பதிவுதொடங்குவதற்கு முன்பே 7 மணியில் இருந்தே வாக்காளர்கள் வரிசையில் நின்றிருந்தனர்.
ஆண்டிப்பட்டி முழுவதும் 216 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த மையங்கள் வீடியோகேமராக்கள் மூலம் தேர்தல் கமிஷனால் கண்காணிக்கப்பட்டன.
சுமார் 5,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த தேர்தலைவிட 10 சதவீதம் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக காவல்துறை டி.ஜி.பி. நெய்ல்வால் கூறுகையில், தேர்தலையொட்டி ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக 104 பேர் கைது செய்யப்பட்டனர். 25 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கைதானவர்களில் முன்னாள் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் அடங்குவார். தேர்தல் மிகஅமைதியாக நடந்து முடிந்தது என்றார்.
கைதான அனைவருமே திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications