ஆண்டிப்பட்டியில் வாக்குப்பதிவு தொடங்கியது
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்ட சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்குத்தொடங்கியது.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னரே காலை 7 மணியிலிருந்தே மக்கள் வாக்குச் சாவடிகளில் நீண்டவரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
காலை சரியாக 8 மணி ஆனவுடன் வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் சுறுசுறுப்புடன் வாக்குச்சாவடிக்குள் சென்றுதங்களுடைய வாக்குகளைப் பதிவு செய்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலிலேயே ஆண்டிப்பட்டி தொகுதி மக்கள் மின் வாக்குப்பதிவுஎந்திரத்தைப் பார்த்துப் பழக்கப்பட்டு விட்டதால், அவர்களுக்கு அவ்வளவு சிரமம் இருக்கவில்லை.
மளமளவென்று வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பட்டனைத் தட்டி தங்களுடைய ஓட்டைப் போட்டுவிட்டுவெளியேறிக்கொண்டே உள்ளனர்.
இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடையும் ஆண்டிப்பட்டி தொகுதியில் 60 முதல் 65 சதவீத வாக்குகள்பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.