ஆண்டிப்பட்டி முழுவதும் போலீஸ் ரோந்து
ஆண்டிப்பட்டி:
தமிழகப் போலீசாரும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரும் ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் ரோந்து சுற்றிக்கொண்டுள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் வாக்குப்பதிவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிரமடைந்துள்ளது.
ஆண்டிப்பட்டிக்கு வரும் வாகனங்களை போலீசார் முழு சோதனையிடுகின்றனர். மேலும் பல்வேறு இடங்களில்சோதனைச் சாவடிகளும் புதிதாகப் போடப்பட்டு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தொகுதி முழுவதிலுமே போலீசார் ரோந்து சுற்றி கள்ள ஓட்டுப் போடாதவண்ணம் கண்காணித்து வருகின்றனர். பலவாக்குச் சாவடிகளில் திமுக மற்றும் அதிமுகவினரிடைய சிறு மோதல்கள் ஏற்பட்டன. அங்கெல்லாம் விரைந்துசென்று போலீசார் அவர்களைச் சமாதானம் செய்து வருகின்றனர்.
வாக்காளர்கள் இதனால் பயமில்லாமல் பெருமளவில் வாக்களிக்க வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஆனால் இத்தகைய போலீசார் கூட்டத்தைத் தங்கள் வாழ்நாளிலேயே பார்த்திருக்காத ஏராளமான வாக்காளர்கள்பயந்து போய் வாக்களிக்க வராமல்கூட இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications