பரமக்குடி: உதவித்தொகை கேட்டு பள்ளி மாணவர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

பரமக்குடி:

பரமக்குடி பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கான உதவித் தொகை வழங்காததால் அவர்கள் போராட்டத்தில்இறங்கினர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு நீண்ட நாட்களாகமாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்காமல் அரசு இருந்துள்ளது.

இது குறித்து மாணவர்கள் தலைமையாசிரியரிடம் பல முறை புகார் கூறியுள்ளனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இதைகண்டு கொள்ளவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு சென்று முற்றுகையிட்டனர்.உடனடியாக மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.

உடனடியாக உதவித்தொகை வழங்க வில்லை என்றால், சாலை மறியலில் ஈடுபடப் போவதாகவும் மாணவர்கள்தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+