For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை- புலிகள் இடையே வரலாற்றுச் சிறப்பு ஒப்பந்தம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு வழி வகுக்கும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அமைதி ஒப்பந்தத்துக்குஇலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் இன்று ஒப்புதல் அளித்தனர்.

நார்வே முயற்சியால் உருவாக்கப்பட்ட இந்த ஒப்பந்தந்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தனது ஒப்புதலைஅளித்தார்.

அதே போல விடுதலைப் புலிகளும் இந்த ஒப்பந்தந்துக்கு தங்கள் ஒப்புதலை அளித்துவிட்டதாக அதிகாரிகள்தெரிவித்தனர்.

முதலில் ஒரு மாத காலத்துக்கு இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பின்னர் இதுமேலும் ஒரு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டது. இப்போது நிரந்தர போர் நிறுத்தத்குக்கு இரு தரப்பினரும் ஒப்புதல்தந்திருப்பது இலங்கையில் அமைதி ஏற்பட வழி வகுக்கும்.

இந்த ஒப்பந்தம் ஏற்படுவதில் சில் சிக்கல்கள் இருந்து வந்தன. குறிப்பாக புலிகளின் படகுகளை நிறுத்திசோதனையிட கடற்படைக்கு அனுமதி வேண்டும் என இலங்கை கோரியது. ஆனால், இதை புலிகள் ஏற்க மறுத்துவந்தனர்.

இப்போது இந்த விவகாரத்தில் இரு தரப்பினருமே விட்டுக் கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால் ஒப்பந்தம்எட்டப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று காலை தான் கடற்புலிகளுக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையே மோதல் நடந்தது.கடற்படை தான் முதலில் புலிகள் மீது தாக்கியது. இதையடுத்து புலிகள் திருப்பித் தாக்கியதில் ஒரு கடற்படைஅதிகாரி இறந்தார். புலிகள் தரப்பில் சேதம் எவ்வளவு என்று தெரியவில்லை.

இந்தச் சண்டையால் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், அதையும்மீறி இரு தரப்பினரும் அமைதி ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் தந்திருப்பது தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சிஅளித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X