விசா இல்லாத 2 பாகிஸ்தானியர் உள்பட 15 வெளிநாட்டினர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் விசா முடிந்த பிறகும் தங்கியிருந்த 2 பாகிஸ்தான் பெண்கள் உள்பட 15 வெளிநாட்டினர் போலீசாரால்கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு பிறகு இந்தியாவில் விசா அனுமதியில்லாமல் தங்கியிருக்கும்வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து நாட்டை விட்டு அனுப்பும்படி மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.
இதன்படி நாடு முழுவதும் விசா இல்லாமல் தங்கியிருப்பவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இதன்படி தமிழகத்தில் மட்டும் 15 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் பாகிஸ்தானைசேர்ந்த பெண்கள். அதில் ஒருவர் வேலூர் மாவட்டம் ஆம்பூரிலும், இன்னொருவர் நாகூரிலும் கைதுசெய்யப்பட்டனர்.
மேலும் விசா முடிந்த பின்னரும் தங்கியிருந்த 13 வெளிநாட்டினரை மேல்மலையனூரில் போலீசார் கண்டுபிடித்துக்கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications