"அம்மா" பிறந்த நாளன்று அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள்
சென்னை:
நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த சென்னை தம்புச் செட்டித் தெரு காளிகாம்பாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்த அதிமுகவினர்ஏற்பாடு செய்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு நாளை (24ம் தேதி) 54வது வயது பிறக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதிலும்அதிமுகவினர் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அதில் ஒன்றாக பிரபலமானஅனைத்துக் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னையில், தம்புச் செட்டித் தெருவில் உள்ளது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காளிகாம்பாள் கோவில். மராட்டியமன்னன் சத்ரபதி சிவாஜி வந்து வணங்கிய சிறப்பு கொண்டது இந்தக் கோவில். சமீபத்தில்கூட சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் இங்கு வந்து வணங்கிச் சென்றார்.
இந்தக் கோவிலில் 24ம் தேதி சிறப்பு பூஜைக்கு வட சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் சேகர் பாபு ஏற்பாடுசெய்துள்ளார். அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் அன்று செய்யப்படுகிறது.
புஷ்ப அலங்காரத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளித் தேரும் இழுக்கப்படுகிறது. அமைச்சர்பொன்னையன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொள்கின்றனர்.
இதுதவிர அன்றைய தினம் 254 பேருக்கு இலவச வேட்டி, சேலையையும் சேகர் பாபு வழங்குகிறார். இதேபோல,சென்னையில் உள்ள மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்ஆகியவற்றிலும் பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications