For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேனி அருகே குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

தேனி:

தேனி மாவட்டம் போடி அருகே 4 பள்ளி மாணவர்களின் பிணங்கள் கோவில் குளத்தில் மிதந்தன. அவர்கள்குளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

போடி அருகே உள்ளது சிலைமலை கிராமம். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ராமகிருஷ்ணன், பாலகிருஷ்ணன்,அழகராஜா, கார்த்திகேயன். இவர்கள் 6ம் வகுப்பு படித்து வந்தனர்.

வியாழக்கிழமை காலை அவர்கள் வழக்கம் போல பள்ளிக்குச் சென்றனர். ஆனால் மாலை ஆகியும் அவர்கள்திரும்ப வில்லை. மாங்காய் பறிக்க அவர்கள் போயிருக்கலாம் என்று நினைத்த அவர்களது பெற்றோர் அவர்களைத்தேடவில்லை.

ஆனால் இரவாகியும் கூட மாணவர்கள் வீடு திரும்பாததால், பயந்து போன பெற்றோர் போலீஸில் புகார்கொடுத்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை அந்த நான்கு மாணவர்களும் மீனாட்சிபுரம் அருகே உள்ள கோவில்குளமொன்றில் பிணமாக மிதந்தார்கள்.

குளத்தில் குளிக்கும்போது மூழ்கி இந்த மாணவர்கள் இறந்தார்களா அல்லது வேறு காரணம் ஏதாவது இருக்குமாஎன்பது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X