டெஸ்ட் கிரிக்கெட்: டெண்டுல்கர் 28வது சதம்
நாக்பூர்:
ஜிம்பாப்வேக்கு எதிராக நாக்பூரில் நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின்நம்பிக்கை நட்சத்திரமான சச்சன் டெண்டுல்கர் இன்று (சனிக்கிழமை) அபாரமாக செஞ்சுரி அடித்தார்.
இந்த டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று டெண்டுல்கர் (137, அவுட் இல்லை) அடித்த இந்த செஞ்சுரி மூலம்5 விக்கெட் இழப்புக்கு 437 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை ஆட்டநேர இறுதியில் இந்திய அணி எட்டியுள்ளது.
டெண்டுல்கருக்கு இது 28வது டெஸ்ட் செஞ்சுரியாகும். இந்தியாவின் சுனில் காவஸ்கர் (34 செஞ்சுரிகள்) மற்றும்உலகப் புகழ் பெற்ற ஆஸ்திரேலியாவின் டான் பிராட் (29 செஞ்சுரிகள்) ஆகியோருடைய சாதனைகளை மட்டுமேஇன்னும் அவர் முறியடிக்க வேண்டியுள்ளது.
முன்னதாக நேற்றைய ஆட்டத்தின்போது தொடக்க ஆட்டக்காரரான சிவ் சுந்தர் தாசும் செஞ்சுரி (105) அடித்தார்என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விவரம்:
முதல் இன்னிங்ஸ்
ஜிம்பாப்வே - 287/10
இந்தியா - 437/5