தமிழகத்தில் உலக வர்த்தகக் கழகப் பிரிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்தியாவிலேயே முதன் முறையாக உலக வர்த்தகக் கழகம் குறித்த தனிப் பிரிவு தமிழகத்தில்தொடங்கப்படவுள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சங்கர் கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு சங்கர் பேசியதாவது:
நாட்டிலேயே முதன் முறையாக இந்த தனிப் பிரிவு தொடங்கப்படுகிறது.
தமிழகத்தின் தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்து இந்தக் கழகம் அதிக கவனம் செலுத்தும்.
இந்தத் தனிப்பிரிவில் சிறுதொழில், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு, விளையாட்டுப் பொருட்கள் தயாரிப்புஉள்ளிட்டவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
மேலும் இவை தொடர்பான ஆலோசனைகளும் தொழில் முனைவோருக்கு வழங்கப்படும் சங்கர் கூறினார்.












Click it and Unblock the Notifications