டெல்லி விரைந்தார் இளங்கோவன்: தங்கபாலு மீது நடவடிக்கை
சென்னை:
அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் தங்கபாலு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கட்சித் தலைமையுடன்விவாதிக்க தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் நேற்று இரவு டெல்லி விரைந்தார்.
அதிமுகவை தீவிரமாக ஆதரித்து வருபவர் கே.வி. தங்கபாலு. முன்னாள் மத்திய அமைச்சராகவும், தமிழககாங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர். எப்போதுமே ஜெயலலிதாவுன் விசுவாசியாக இருப்பவர். கடந்தமுறைஅதிமுக-காங்கிரஸ் கூட்டணி ஏற்பட முக்கியக் காரணமாக இருந்தவர்.
ஆனால், அதிமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் முறித்துக் கொண்ட பின்னரும் தொடர்ந்து அவர் அதிமுகவைஆதரித்து வந்தார். ஆண்டிப்பட்டி தேர்தலின்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என காங்கிரஸ்கட்சியினருக்கு அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். தங்கபாலுவுக்கும் அவரதுஆதரவாளர்களாக உள்ள சில மாவட்டத் தலைவர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால்,இந்த நோட்டீசுக்கு பதிலளிக்க தங்கபாலு மறுத்துவிட்டார்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக உள்ள தன் மீது நடவடிக்கை எடுக்க மாநிலத் தலைவரானஇளங்கோவனுக்கு அதிகாரமில்லை என்று அறிவித்தார்.
இதையடுத்து இருவருமே தினமும் பத்திரிக்கைகள், அறிக்கைகள் மூலம் மோதி வருகின்றனர்.
இந் நிலையில் இளங்கோவன் நேற்றிரவு திடீரென டெல்லி விரைந்தார். அவர் சோனியா காந்தியையும், தமிழககாங்கிரஸ் விவகாரங்களை கவனித்து வரும் ரமேஷ் சென்னிதலாவையும் சந்தித்து தங்கபாலு மீது நடவடிக்கைஎடுக்கக் கோருவார் என்று தெரிகிறது.
சட்டசபையில் யசோதா தலைமையில் காங்கிரஸ் கட்சியை உடைக்க அதிமுக மேற்கொண்டுள்ள முயற்சிகளையும்அவர் விளக்குவார்.
தங்கபாலு மீது விரைவில் கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.